/* */

Bigg Boss Season 7 கெட்டவார்த்தைக்கு ரெட் கார்டு, கொலை மிரட்டலுக்கு எல்லோ கார்டா? கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் நிக்சனை மன்னித்த தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனை இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

Bigg Boss Season 7 கெட்டவார்த்தைக்கு ரெட் கார்டு, கொலை மிரட்டலுக்கு எல்லோ கார்டா? கமலை கலாய்க்கும் நெட்டிசன்கள்
X

பிரதீப், கமல், நிக்சன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். முதலில் 18 போட்டியாளர்களும், பின்னர் வைல்டுகார்டு போட்டியாளர்களாக 5 பேரும் பங்கேற்றனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவி வருகின்றது.

முதலில், சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும், அவரை கிச்சன் பக்கம் வரவேண்டாம் என்றும் நிக்சன் கூறினார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்கில் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும், நிக்சனும் மாறிமாறி கருத்துகளை தெரிவித்ததால் இருவருக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது.

இதற்கிடையே, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வினுஷா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரை நிக்‌ஷன் உருவக்கேலி செய்த சம்பவத்தை பற்றி அர்ச்சனா பேசியதால் நிக்சன் கோபமடைந்து ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அர்ச்சனா உள்ளிட்ட சக போட்டியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ‘சொருகிருவேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்றைய வார இறுதி நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நிக்சன் வெளியேற்றப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அர்ச்சனா ‘உரிமைக் குரல்’ எழுப்பியும் எச்சரிக்கைக்கான மஞ்சள் கார்டு மட்டுமே கொடுக்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதுமட்டுமின்றி வீட்டுக்கு வந்து 4 வாரத்திற்கு பிறகு வினுஷா விஷயத்தை உங்களின் விளையாட்டுக்காக பேசினீர்களா என்றும், வினுஷா வீட்டில் இல்லாத போது இதை ஏன் பேச வேண்டும் போன்ற கேள்விகளையும் அர்ச்சனாவை நோக்கி கமல் முன்வைத்தார்.

முன்னதாக, இந்த சீசனில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பேசுவதாக சக பெண் போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

சர்ச்சை கருத்துக்கே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும்போது கொலை மிரட்டல் விடுத்தவரை மன்னித்து ஏன் மற்றொரு வாய்ப்பு தருகிறீர்கள்? என்று கமலை நோக்கி ரசிகர்கள் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேலும், வினுஷா வீட்டில் இல்லாதபோது அவரது பிரச்னையை பேசக் கூடாது என்றால், அவர் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு நடந்த டாஸ்க்கில் நிக்‌சன் கூறிய ‘உருவக்கேலி’ கருத்தை ஏன் ஒளிபரப்பு செய்தீர்கள் என்ற கேள்வியும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Updated On: 10 Dec 2023 4:02 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?