/* */

மாயா - விஷ்ணு மோதல்...! கேப்டனுக்கு செக்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2வது புரோமோ வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

மாயா - விஷ்ணு மோதல்...! கேப்டனுக்கு செக்..!
X

இன்றைய புரோமோ 2

மாயாவுக்கும் விஷ்ணுவுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் விஷ்ணு வேண்டும் என்றே மாயாவை தண்டனை பெற அனுப்புவதாக அவர் நினைக்கிறார். இதனால் எதிர்த்தும் பேசுகிறார். இதன்காரணமாக விஷ்ணு தன் பங்கு விளக்கத்தை வைக்க முயற்சிக்கிறார். ஆனாலும் கொஞ்சம் மோதல் பெரிதாகுவது போல போகிறது.

பிக்பாஸ் ஸ்பெஷல் எபிசோட்

கமல்ஹாசன் வந்ததும், உள்ளே நடக்கும் ஸ்ட்ராட்டஜி மற்றும் சில விசயங்களைப் பற்றி பேசியிருந்தார். பின் அகம் டிவி வழியே அகத்துக்குள் என்று சொல்லி, உள்ளே கொண்டு சென்றனர்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வரும் விஜய், அனன்யா இருவரது பாணியையும் வீட்டிலுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கமல்ஹாசன் தெரிந்துகொள்ள விரும்புகிறார். அதனால் அனைத்து போட்டியாளர்கள் கைகளிலும் கோ பேக் மற்றும் ஸ்டே பேக் என்று ஸ்டிக்கர்களைக் கொடுக்கிறார்கள்.

அனன்யாவுக்கு பலரும் கோ பேக் என்று சொல்லிக் கொள்கிறார்கள். விஜய்க்கு ஸ்டே பேக் கொடுக்கிறார்கள். முடிவில்

விஜய், அனன்யா இருவருக்கும் சமமான அளவு கோ பேக், ஸ்டே பேக் கிடைத்துள்ள நிலையில், இதிலிருந்து என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அனன்யா தன்னால் எந்த விளையாட்டும் விளையாடமுடியவில்லை. நான் நானாகவே இருக்கிறேன் என்று அவர் தெரிவிக்கிறார். ஒவ்வொருவரும் அவர் விளையாடுகிறார் இவர் விளையாடுகிறார் என்று சொல்கிறார்கள்.

மீண்டும் கமல்ஹாசன் உள்ளே வருகிறார். அகம் டிவி வழியே அகத்திற்குள்

அனன்யா காப்பாற்றப்படுவதாக தெரிவித்தார் கமல்ஹாசன்..

ஃபேவரைட்டிஸம்

அர்ச்சனா, ரவீனா உள்ளிட்டோர் மாயா, பூர்ணிமா, விக்ரம், நிக்ஷன் ஆகியோர் ஃபேவரைடிஸம் காண்பித்ததாக கூறினர். இதுபோல் அர்ச்சனா, கூல் சுரேஷுக்கு ஃபேவரைட்டிஸம் காண்பிக்கிறார். தினேஷ், மணிக்கு காண்பிக்கிறார் என்று நிக்ஷன் கூறுகிறார். விஜய் இந்த விசயத்தில் பூர்ணிமா விஷ்ணுவை மாட்டி விடுகிறார். இதில் அர்ச்சனாவையும் இழுத்து விடுகின்றனர்.

மொத்தமாக குழுவாக குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். சுரேஷையும் மாட்டிவிடுகிறார்கள்.

விக்ரம் அடுத்து தனது வருத்தத்தை சொல்கிறாரா். இப்படி ஃபேவரைட்டிஸம் செய்து திறமைகள் மதிக்கப்படாததாக மாறிவிடுகிறது. அது லஞ்சம் மாதிரியான ஒன்று. கொடுக்கிறதும் தப்பு வாங்கிறதும் தப்பு என்றார் கமல்ஹாசன்.

எலிமினேசன்

விசித்ரா,

தினேஷ்,

ஜோவிகா,

விக்ரம்,

மணி ஆகியோரில் ஒருவர் இன்று எலிமினேசன் ஆக இருக்கிறார். அதில் முதலில் விசித்ரா, தினேஷ் இருவரையும் மக்கள் காப்பாற்றிவிட்டதாக கூறுகிறார் கமல்ஹாசன். அடுத்து மீதமுள்ள ஜோவிகா, விக்ரம், மணி மூவரிலும் யார் வெளியேறிவார் என்று கேட்டபோது பெரும்பாலும் ஜோவிகாவை கூறினார்கள். ஜோவிகாவே தான்தான் வெளியே செல்ல இருப்பதாக கூறினார். அதன்படியே கமல்ஹாசனும் ஜோவிகாவை வெளியே வரச் சொல்லுகிறார். மக்கள் அவருக்குதான் குறைவான வாக்குகள் செலுத்தியிருக்கிறார் என்று சொல்ல, அவர் விடைபெறுகிறார்.

புத்தகப்பரிந்துரை

சத்யமூர்த்தி என்கிற இசை அவர்களின் கவிதைகள் புத்தகத்தை கமல்ஹாசன் பரிந்துரைத்துள்ளார்.

மாயா, அர்ச்சனாவிடம் நீங்கள் ஜோவிகாவை வெளியேற்றிவிட்டீர்கள் சந்தோஷமா என்று கூறுகிறார். அடுத்து பூர்ணிமா தான் உங்கள் கேங்கில் இல்லை என்று கூறுகிறார்.

அடுத்து விஜய் குறித்து பூர்ணிமா வருத்தப்படுகிறார்.

விஜய்யும் விசித்ராவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்கிறார்கள்.

Updated On: 4 Dec 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்