சங்க நிர்வாகிகள் மீன் வண்டிய உடமாட்றாங்கோ! குமுறும் குடியிருப்பு வாசிகள்...!
சங்க நிர்வாகிகள் மீன் வண்டிய உடமாட்றாங்கோ! குமுறும் குடியிருப்பு வாசிகள்...!
HIGHLIGHTS
Neeya Naana This Week Promo 1
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை, குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கடுமையான கட்டுப்பாடுகளால் வதைக்கிறார்கள். முக்கியமாக நான்வெஜ் நாட் அலோட் என்று சொல்வது மிகப் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. குடியிருப்புக்குள் மீன் வண்டியை விட மறுக்கிறார்கள் என்று ஒரு பெண் குமுறுகிறார். சங்க நிர்வாகிகள் தரப்பில் பேசும் ஒரு பெண், இதையெல்லாம் அனுமதித்தால் நாளை அதன்மூலம் வரும் பிரச்னைகளை யார் சந்திப்பார்கள் என்று கேட்கிறார். அதற்கு கோபிநாத் அப்போது நீங்கள் தானே சங்க நிர்வாகி, நீங்கள்தான் சந்திக்க வேண்டும் என்கிறார்.
Neeya Naana This Week Promo 2
உங்க அப்பார்ட்மெண்டுக்கு வந்தால் என்னென்ன ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ண வேண்டும் என கோபிநாத் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் நபர்கள், கார் பார்க்கிங் ரெஸ்ட்ரிக்ஷன் இருக்கிறது என்கிறார் ஒருவர். பேச்சுலர்ஸ்க்கு அப்பார்ட்மெண்டில் அனுமதி இல்லை என்று ஒருவர் தெரிவிக்கிறார்.
இவ்ளோ பேர் இருக்குறப்ப பேச்சுலர்க்கு ஓரமா ஒரு இடம் குடுக்கக்கூடாதா என்று கூறுகிறார் கோபிநாத். குழந்தைங்க சண்டையில் பெரியவர்கள் தலையிடக் கூடாது. பேசன்ட்ஸ் நாட் அலோட் என்கிறார் ஒரு பெரியவர். பொதுவெளியில் புகைப்பிடிக்க கடுமையான தடை என்று தெரிவிக்கிறார் ஒரு பெண்.
Neeya Naana This Week Promo 3
அசோசியேசன் ஆளுங்க இக்கட்டான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி பணம் பண்ண பாக்குறாங்க என்று குற்றச்சாட்டு இருக்கிறதா? என்று கோபிநாத் கேட்க அதற்கு சிலர் பதிலளிக்கின்றனர்.
புரோக்கரேஜ் கேட்கிறார்கள், காலி செய்யும்போது பிரச்னை ஏற்படாமல் இருக்க கமிஷன் கேட்கிறார்கள். வெளி ஆட்களை உள்ளே விடாமல் இவர்களுக்கு கமிஷன் தரும் வியாபாரத்தை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
Neeya Naana This Week Promo 4
சங்க நிர்வாகிகளை ஒரு வேலையாட்களைப் போல நடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு எழுகிறது. ஒருவர் தப்புதான் என்கிறார். இன்னொருவர் அந்த பொறுப்புக்கு கேட்க வேண்டிய கேள்வி, அதனை பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறார். இமெய்ல் போட்டாச்சு என அலட்சியமாக பதில் தருகிறார்கள் என்கிறார் இன்னொரு பெண்மணி.
நீயா நானா நிகழ்ச்சி ஒரு அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில், இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்கள் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளைப் பற்றிப் பேசுவார்கள். இந்த சூழ்நிலைகள் பல நேரங்களில் நகைச்சுவையாக, சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு சிறந்த தொகுப்பாளர். அவர் தனது கேள்விகள் மூலம், பங்கேற்பாளர்களிடமிருந்து சுவாரஸ்யமான தகவல்களைப் பெற்று வெளிக்கொண்டு வருவதில் வல்லவர்.
நிகழ்ச்சியின் நோக்கம்
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பங்கேற்பாளர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளைப் பற்றி வெளிப்படையாக பேசும் வாய்ப்பை வழங்குவது. இந்த நிகழ்ச்சி மூலம், பங்கேற்பாளர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சில திருப்புமுனைகள் குறித்து புரிந்துகொள்ளவும் முடியும்.
நிகழ்ச்சியின் அமைப்பு
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது. ஒரு எபிசோடில் இரண்டு தரப்பினர் பங்கேற்பார்கள். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளைப் பற்றிப் பேசுவார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பங்கேற்பாளர்கள் எதைப் பற்றி பேசப்போகிறார்கள் என்பது குறித்த அறிமுகத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பேசுவார். பின்னர், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள்.
கோபிநாத் அவர்கள் சரியான கேள்விகள் மூலம் மேலும் பேச வைப்பார். சரியான பாதையில் அவர்களை திருப்பி கொண்டு செல்லும் பணியை கோபிநாத் சிறப்பாக செய்து வருகிறார்.