/* */

உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை..? தெரியுமா?

உயிர்மெய் என்பது உயிருடன் மெய் சேர்வது. உடலில் உயிர் இருந்தால் மட்டுமே அது ஜீவன் ஆகும். அதேபோல உயிர் எழுத்துக்களுடன் மெய் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகின்றன.

HIGHLIGHTS

Uyir Mei Ezhuthukal

உயிர்மெய் எழுத்துகள் – 216.

ஒரு மெய் எழுத்தும் ஓர் உயிர் எழுத்தும் சேர்ந்து பிறக்கக் கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து. (க் + அ = க).

மெய் எழுத்துகள் பதினெட்டும் (18), உயிர்எழுத்துகள் பன்னிரெண்டும் (12) சேர்ந்து (18 x 12 = 216) இருநூற்று பதினாறு (216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன.

Uyir Mei Ezhuthukal

இவ்வெழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

உயிர்மெய் குறில் எழுத்துகள் 90 (உயிர்க் குறில் 5 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு ஒன்று.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் 126 (உயிர் நெடில் 7 x 18 மெய் எழுத்துகள்) ஒலிக்கும் மாத்திரை அளவு இரண்டு

Uyir Mei Ezhuthukal

உயிர்மெய்

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும். பதினெட்டு மெய் எழுத்துகள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.

மெய்

-

உயிர்

=

உயிர்மெய்

18

x

12

=

216

எடுத்துக்காட்டாக

க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க் + அ = க

க் + ஆ = கா

க் + இ = கி

க் + ஈ = கீ

க் + உ = கு

க் + ஊ = கூ

க் + எ = கெ

க் + ஏ = கே

க் + ஐ = கை

க் + ஒ = கொ

க் + ஓ = கோ

க் + ஒள = கௌ

இவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.

Uyir Mei Ezhuthukal

உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும். அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரையும், உயிர்மெய் நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரையும் பெறும். உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும்.

உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும். உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து, அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக.

உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்து பின்னும் வரும்.

க்+அ=க

ம்+உ =மு

உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

Uyir Mei Ezhuthukal

எடுத்துக்காட்டு:

க் = க, கா, கி, கீ

ப் = பி, பு, பெ, பை

ட் = டி, டீ, டொ, டோ


உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பின்வருமாறு அமையும்.

அகர உயிருடன் கூடிய மெய் எழுத்துகள், புள்ளி இல்லாத மெய் எழுத்தாக இருக்கும்.

க, ங, ச, ஞ, ட

மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது மேற்கண்ட வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்று வரும்.

ஆகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள், அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகளுடன் வலதுபக்கம் கால் ‘ா’ பெற்று வரும்.

Uyir Mei Ezhuthukal

கா, சா, ஞா, டா

இகர உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ி’குறியீடு பெற்று வரும்

பி, சி, தி, டி

ஈகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ீ’குறியீடு பெற்று வரும்

நீ, ளீ, ரீ, தீ

உகரத்துடன் கூடிய மெய் எழுத்துகள் தனியான குறியீடு இல்லாமல் முழு உருவமும் மாறி வரும்.

கு, ஙு, சு. ஞு, டு, ணு, து, நு, பு,மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு.

ஊகாரத்துடன் கூடிய மெய் எழுத்துகளும் தனிக் குறியீடு இல்லாமல் மாறி வரும்.

கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ. பூ,மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.

எகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ஒற்றைக் கொம்பு என்னும் ‘ெ’ குறியீடு பெற்று வரும்.

கெ, செ, டெ, மெ

ஏகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் இரட்டைக் கொம்பு என்னும் ‘ே’ குறியீடு பெற்று வரும்.

கே, பே, ளே, வே, யே

ஐகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ை’என்ற குறியீட்டைப் பெற்று வரும்.

மை, லை, றை, ழை, னை

ஒகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

Uyir Mei Ezhuthukal

பொ, யொ, ரொ, சொ

ஓகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ே’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.

கோ, டோ, மோ, யோ, ழோ

ஒளகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ள’ என்ற குறியீடும் பெற்று வரும்.

பௌ, சௌ, நௌ, ரௌ

புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்

Uyir Mei Ezhuthukal

(நன்னூல் 89)

(பொருள்: அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும். மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்.)

Updated On: 23 March 2024 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!