/* */

என் வீட்டு போர்வெல்லும் வறண்டு போச்சுப்பா!: பெங்களூரு தண்ணீர் பிரச்னை குறித்து துணை முதல்வர் புலம்பல்

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், பெங்களூருவில் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தனது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறு கூட வறண்டுவிட்டதாகவும் கூறினார்.

HIGHLIGHTS

என் வீட்டு போர்வெல்லும் வறண்டு போச்சுப்பா!: பெங்களூரு தண்ணீர் பிரச்னை குறித்து துணை முதல்வர் புலம்பல்
X

கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பெங்களூருவுக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று உறுதியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் உள்ள அனைத்துப் பகுதிகளும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், தனது வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறு கூட வறண்டுவிட்டதாகவும் கூறினார்.

"நாங்கள் கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கிறோம், ஆனால் எந்த விலை கொடுத்தாவது நகரத்திற்கு தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வோம்" என்று துணை முதல்வர் கூறினார்.

மழையில்லாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் பெங்களூரு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்கிறது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்குமாறு குடியிருப்பு சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.

நெருக்கடிக்கு மத்தியில், பல தனியார் தண்ணீர் டேங்கர்கள் தண்ணீரை விநியோகிப்பதற்காக குடியிருப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், சில டேங்கர்கள் ரூ.600க்கும், சில டேங்கர்களில் ரூ.3000 வரையிலும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. விலை நிர்ணயம் செய்ய அனைத்து தண்ணீர் டேங்கர்களும் அதிகாரிகளிடம் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். டேங்கர்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது என்று கூறினார்

பெங்களூருவின் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை மத்திய அரசு முடக்கி வருவதாகவும் துணை முதல்வர் குற்றம் சாட்டினார்.

“பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மேகதாது திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எங்கள் பாதயாத்திரையுடன் மேகதாது திட்டத்தை அனுமதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் , அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. குறைந்தபட்சம் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இப்போது நெருக்கடியின் தீவிரத்தை கருத்தில் கொண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

"முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர், ஆர்.டி.பி.ஆர்., அமைச்சர்கள், அமைச்சர்களுடன், வறட்சி பிரச்னை குறித்து ஆலோசித்தனர். நகரங்களின், 15 கி.மீ., சுற்றளவில் உள்ள நீர் ஆதாரங்களை பயன்படுத்தி, நகர்ப்புறங்களுக்கு தண்ணீர் வழங்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பெங்களூரு நகருக்கு ராமநகரா, ஹோசகோட், சன்னபட்னா, மாகடி மற்றும் பிற நகரங்களில் இருந்து தண்ணீர் டேங்கர் மூலம் தண்ணீர் கொண்டு வரவும்," என்று அவர் மேலும் கூறினார்.

Updated On: 6 March 2024 7:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...