/* */

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி13 பேர் உயிரிழப்பு: பனிமூட்டத்தால் பரிதாபம்

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில்13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி13 பேர் உயிரிழப்பு: பனிமூட்டத்தால் பரிதாபம்
X

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, டாடா சுமோ மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சிக்கபல்லப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பனிமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், டாடா சுமோ காரில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 ஆண்கள், 4 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக பல வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 Oct 2023 6:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி