/* */

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க தடை இல்லை

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க தடை இல்லை
X

மகர ஜோதி தரிசனம் - கோப்புப்படம் 

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதிதிறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம் போர்டு எடுத்தது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இதன் காரணமாக கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15ம் தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு 16ம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20ம் தேதி வரை தினமும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சன்னிதானத்துக்கு செல்வதற்காக 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை 13ம் தேதி புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர் தொட்டியின் முன்பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக்களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்றுப்பகுதிகள், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபத்தின் முன்பகுதி உள்பட 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்யலாம். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Updated On: 12 Jan 2024 7:03 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்