Begin typing your search above and press return to search.
நேபாள நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழப்பு: பிரதமர் மோடி கவலை
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதங்கள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேபாள மக்களுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேதம் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எமது எண்ணங்கள் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.