/* */

இன்று மாலைக்குள் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

HIGHLIGHTS

இன்று மாலைக்குள் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு
X

இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் மீட்பு பணிகள் 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சில்க்யாரா-தண்டல்கான் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை பணியின்போது விபத்து ஏற்பட்டது.

கடந்த 12ம் தேதி சாலைப்பணிகள் நடந்து கொண்டு இருந்தபோது சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்று 11வது நாளாக தொடருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, நீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 48 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் மட்டுமே தோண்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளால் வழங்கப்பட்ட 30 வினாடிகள் கொண்ட வீடியோ, சுரங்கப்பாதையில் உள்ள விளக்குகளின் பின்னணியில், ஹெல்மெட் மற்றும் கட்டுமானத் தொழிலாளி ஜாக்கெட்டுகளை அணிந்து, கேமராவின் முன் அரை வட்டத்தில் சிக்கியிருந்த ஒரு டஜன் ஆண்கள் நிற்பதைக் காட்டியது. அனுப்பப்பட்ட வாக்கி-டாக்கி கியரில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, ஒவ்வொருவராக கேமரா முன் தங்களை ஆஜராகுமாறு ஒரு மீட்புப் பணியாளர் கூறுவதைக் கேட்க முடிந்தது. அவர்கள் நலமாக இருப்பதாக பதிலளித்ததாக மீட்பு கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைத்த சத்தாண உணவு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பது உறுதியாகி இருப்பதால் மீட்பு பணி வேகம் எடுத்துள்ளது. தொழிலாளர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை இன்றும் தொடர்ந்து 3-வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு மீட்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சமைத்த சத்தாண உணவு விநியோகம், மருந்து பொருட்கள் வழங்குவது குறித்தும் மத்திய அமைப்பு, சர்வதேச வல்லுநர் உதவியுடன் நடக்கும் மீட்புப்பணி பற்றியும் தெரிவிக்கப்பட்டதாக புஷ்கர் சிங் கூறியுள்ளார். மீட்புப்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதாக புஷ்கர் சிங் தாமி பதிவிட்டுள்ளார்.

Updated On: 22 Nov 2023 6:26 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...