/* */

Best Husband Quotes Tamil கணவன் பற்றிய சிறந்த மேற்கோள்கள்

ஒரு பெண்ணிற்கு கணவனை விட உயர்ந்த நெருங்கிய உறவோ உன்னதமான உறவோ எதுவும் இல்லை. கணவனை விட நெருங்கிய உறவு ஒரு பெண்ணிற்கு யாருமில்லை.

HIGHLIGHTS

Best Husband Quotes Tamil கணவன் பற்றிய சிறந்த மேற்கோள்கள்
X

கணவன் மனைவி - ஓவியர் மாருதி வரைந்த ஓவியம்

உங்கள் மற்ற பாதி உங்கள் கணவர். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு குடும்பத்தை நிறுவ திட்டமிட்டுள்ள மனிதர். ஒரு உறவில் இருக்கும் பையன் காதல் முன்னேற்றங்களைத் தொடங்க வேண்டும் என்று அடிக்கடி கருதப்பட்டாலும், ஆண்களில் மிகவும் ஆண்களும் கூட தங்கள் மனைவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது வலுவூட்டுவதன் மூலம் பயனடையலாம்.

தினம் ஒரு தடவை தோல்வி

பெற விரும்புகின்றேன் என்

கணவனின் தோளில் சாய்ந்து

ஆறுதல் தேடுவதற்காக..

என் அன்பு கணவனே உன்

தோள் சாயும் நேரத்தில் என்

உலகம் சுருங்கி உனக்குள்

அடங்கியது உயிர் உறைந்து

என் இதயம் உன்னுள் துடிக்கிறது.

ஆறுதலாய் ஒரு வார்த்தை..

மௌனமாக ஒரு முத்தம்..

அன்பாய் ஒரு அரவணைப்பு..

இது போதும் வாழ்க்கையில்

எவ்வளவு கஷ்டங்களையும்

தாங்கிக்கொள்ள.

உன் கூட அதிகம் சண்டை

போடுவேன் ஆனால் நீ

இல்லாமல் ஒரு நிமிடம் கூட

என்னால் வாழ முடியாது.

என் வாழ்க்கையின் மறு பெயர்

என்னெவென்று கேட்டால்

தயங்காமல் சொல்லுவேன்

நீயென்று..!

தொலைத்தால் கிடைக்கும்

பொருள் அல்ல நீ எத்தனை

ஜென்மங்கள் எடுத்தாலும்

யாருக்கும் கிடைக்காத

பொக்கிஷம் நீ.. எனக்கு மட்டும்

கிடைத்த வரம் நீ.

மணம் முடிக்கும் வரை

நேசிப்பதல்ல காதல்..

மரணம் வரை நேசிப்பது தான்

உண்மையான காதல்.

உனக்கு நான் இரண்டாவது

தாயாக இருக்கலாம்.. ஆனால்

எனக்கு அன்பு கணவன் நீ

எப்போதும் முதல்

குழந்தை தான்.

எவ்வளவு விலை உயர்ந்த

தலையணையாக இருந்தாலும்

என் அன்பு கணவனின்

மடிக்கு ஈடாக முடியாது.

பிறந்த வீடு நினைவுக்கு வராத

அளவிற்கு என்னைப்

பார்த்துக் கொள்ளும் கணவன்

கிடைத்தது என் வரம்.

ஒரு பெண்ணிற்கு

கட்டியணைத்து முத்தம்

தருவது அம்மாவிற்கு பிறகு

கணவன் மட்டும் தான்.

உன்னை புரிந்து கொண்ட

எனக்கு மட்டுமே தெரியும்

நீ பேசுற கோபத்தை விட நீ

பேசாத என் மீது கொண்ட

பாசம் அதிகம் என்று..!

மறைந்து நின்று தன்

மனைவியை பார்த்து

ரசிக்கும் ஒரு ஆணின்

முகத்தில் பார்த்துக் கொள்ளலாம்

அவனின் வெட்கத்தை..

நீ என்னிடம் மன்னிப்பு

கேட்கும் ஒவ்வொரு முறையும்

நான் எல்லையில்லா ஆனந்தம்

அடைகிறேன்.. காரணம் என்னவன்

என்னை மட்டும் தான் அதிகமாக

நேசிக்கிறான் என்று..!

என் கணவன் எனக்கு கிடைத்த

வரம்.. என்னவனை மட்டுமே

அதிகமாக பிடிக்கும்.

ஒவ்வொரு மனைவியின்

மிகப் பெரிய ஆசை தான்

கணவரின் ஒட்டுமொத்த

அன்பும் தனக்கு மட்டுமே

கிடைக்க வேண்டும் என்பது.

எப்போதும் நீ என்னுடன்

இருக்க வேண்டும் அன்பு

கணவனாக மட்டுமல்ல

ஆசைக் காதலனாகவும்.

தனக்குள் ஆயிரம் வலிகள்

இருந்தாலும் எனக்கு ஆறுதல்

சொல்லுபவன் தான் என்

அன்பு கணவன்.

Updated On: 4 Feb 2024 8:26 AM GMT

Related News