/* */

Old Memories Meaning in Tamil அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறதா?

பழைய நினைவுகள் என்று எடுத்துக்கொண்டாலே, நாம் எதனால் ஏமாற்றப்பட்டோமோ அதுவே நினைவிற்கு வருகிறது.

HIGHLIGHTS

Old Memories Meaning in Tamil அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறதா?
X

நல்ல பழைய நினைவுகள் எப்போதாவது வரும். ஆனால் அந்த நினைவுகள் வெறும் நினைவுகள் தான் என்பதை நினைத்தே மனம் ஒரு ஓரமாக குமுறிக் கொண்டிருக்கும்.

அந்த நல்ல நினைவுகளைத் தக்க வைத்துக் கொள்ளாமல், விட்டு விட்டோமே என்ற ஏக்கமே ஒருவித கடினமான உணர்வை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாய் இருந்த தருணங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மதி கெட்டுத் திரிந்த நினைவுதான் மனதில் உதிக்கிறது.

குழந்தைப் பருவமாக இருக்கட்டும்.

பள்ளி காலங்களாக இருக்கட்டும்.

கல்லூரி நிகழ்வுகளாக இருக்கட்டும்.

நல்ல நினைவோ, கெட்ட நினைவோ, அது நம்மை காயப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்

காதல்,ஈர்ப்பு, நட்பு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

இவை அனைத்துமே வெறும் இறந்தகால நினைவுகள் தானா, என்னும் சிந்தனையே ஒரு வலி தான்.

அதிலும் ஏதோ ஒரு தருணத்தில் உணர்வுகளால் பிணைப்புற்று. சந்தர்ப்ப சூழ்நிலையால் அவ்வுணர்வு முறிவின் நினைவுகளை, என்ன செய்தாலும் மறக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் தற்பொழுது, இது நல்ல நினைவுகள், இது கெட்ட நினைவுகள் என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. நம்மைச் சுற்றி நடந்த, நடக்கும், நடக்கப்போகும், அனைத்துமே நம் செயல்களின் வெளிப்பாடுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை நான் ஏற்றுக் கொள்வதால், பிறரையும் குறை சொல்ல முடியவில்லை.

நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழும் அனைவருமே இதுபோன்ற நினைவுச் சூழலில் சிக்கி இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இவற்றை நினைவுகளின் கவிதைகள் என்று கூறுவதை விட, நினைவுகளில் வலிகள் என்று கூறுவதே பொருந்தும் .

நல்ல நினைவோ, கெட்ட நினைவோ, அது நம்மை காயப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்

முடிந்தவரை நினைவுகளை அசை போடாமல் இருப்பது நல்லது. ஆனால், அதை விட்டு நாம் விலகி இருக்க நினைக்கக்கொஞ்சம், அதனுடைய ஆற்றல் அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

தற்போது உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது மகிழ்ச்சிப்படுத்த நினைக்கும் எதுவாக இருந்தாலும் அதனை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். எந்த சூழலிலும் அதனை நினைவுகளாக மாற விட்டுவிடாதீர்கள்.

எவ்வளவு நாட்களானாலும் நமது பழைய நினைவுகள் திடீரென தோன்றி நமது அப்போதைய நிம்மதியை, மகிழ்ச்சியை கெடுத்துவிடும். அதுபோன்ற திடீரென தோன்றும் அந்த பழைய நினைவுகள் நம்மை அப்போது எவ்வாறு துன்புற்றோமோ அதே இடத்திற்கே கொண்டு சென்று சில நிமிடங்கள் நமது நிகழ் காலத்தை தகர்த்து விடும்.

நமது மூளை நமது மகிழ்ச்சியான தருணங்களை விட, நாம் துன்பப்பட்ட காலங்களை தான் அதிகமாக நினைவில் வைத்து நம்மை மேலும் துன்புறுத்தும். இது ஏற்படுவதற்கு, நமது எதிர்மறை எண்ணங்கள் காரணமாக இருக்கும். அவை, அச்சம், குற்றஉணர்வு, அவமானம் மற்றும் சோகம் ஆகியவை ஆகும். நமது மூளை எதிர்மறை எண்ணங்களை மட்டுமே அதிகம் நினைத்துக்கொண்டிருப்பதற்கு காரணம் அதன் வாழ்வதற்கான உள்ளுணர்வு காரணமாக இருக்கலாம்.

நமது எதிர்கொள்ளும் திறன் காரணமாக அப்போதைய நமது எதிர்மறை எண்ணங்களை நாம் முறையாக பார்த்திருக்காமல் இருந்திருக்கலாம். அதனால் மீண்டும் அந்த தீர்க்கப்படாத எண்ணங்கள் வந்து நம்மை நிலைகுலையச் செய்யும்.

நாம் இந்த பழைய நினைவுகளில் இருந்து மீள்வதற்கான சில வழிகள்

உங்களுக்கு பழைய நினைவுகளை ஏற்படுத்தும் இடங்களையும், பொருட்களையும் அறவே தவிர்த்துவிடுங்கள். எல்லா நினைவுகளையும் நீங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் சில நினைவுகளை தவிர்க்க முடியும். சில நினைவுகள் தானாவே மெல்ல மெல்ல மறந்து மறைந்துவிடும். அந்த பழைய நினைவுகளை முக்கிய விஷயங்களை நினைத்து மாற்றிக்கெள்ளுங்கள்.

மகிழ்ச்சியான தருணங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுங்கள். எப்போதும் கெட்ட நினைவுகளை மறந்து மகிழ்ச்சியான தருணங்களை மனதில் நினைத்திருங்கள். உதாரணமாக நீங்கள் உங்களுக்கு அன்பானவர்களுடன் சண்டையிட்ட தருணத்திற்கு பதில் அவர்களுடன் சேர்ந்த மகிழ்ந்திருந்த தருணங்களை நினையுங்கள்.

நிகழ் காலத்தில் வாழுங்கள். பழைய நினைவுகளை மறக்க நிகழ் காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு, முதலில் செய்வதை முடிப்பதற்கு தயாராகுங்கள். நிகழ் காலத்தில் வாழ்வது உங்களுக்கு நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும்.

எப்போதும் பிஸியாகவே இருங்கள். நாள் முழுவதும் உங்களை பரபரப்பாகவே வைத்திருங்கள். அப்போதுதான் மற்ற எண்ணங்கள் உங்களுக்கு தோன்றாது. நீங்கள் தனியாக இருப்பது போன்ற சூழல் ஏற்பட்டால் உங்கள் நண்பருடன் வெளியே எங்கேயாவது சென்றுவிடுங்கள்.

மற்ற மாற்றங்கள் உங்கள் பிரச்னை அதிகரித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Updated On: 2 Nov 2023 5:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  3. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  4. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  5. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  6. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  7. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  8. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  9. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  10. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்