/* */

மூன்றாவது முறையாக பா.ஜ.க., வென்றால் என்ன நடக்கும்?

மூன்றாவது முறையாக பா.ஜ.க., வென்றால் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார, ராணுவ வல்லரசாக உருவெடுக்கும்.

HIGHLIGHTS

மூன்றாவது முறையாக  பா.ஜ.க.,  வென்றால் என்ன நடக்கும்?
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

இந்த தேர்தலில் பிஜேபி வென்றால் அக்கட்சி காங்., சாதனையை சமன் செய்யும். 2024 லோக்சபா பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நேரு மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மோடியும் பாஜகவும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற இரண்டாவது கட்சியாக இருக்கும். காங்., கட்சி செய்த சாதனை சமன் செய்யப்படும்.

பா.ஜ., வெற்றி பெற்றால், நடந்து வரும் அனைத்து வளர்ச்சி பணிகளும் முடிவடையும். மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சியும் பல வாரிசு கட்சிகளும் அழிந்து போகும். மாநிலத்திலும் மத்தியிலும் தேர்தலில் தோல்வியடைந்த பிராந்தியக் கட்சிகள் மறைந்து போகலாம்.

2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், UCC, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, CAA அமலாக்கம், குடியுரிமை திருத்தங்கள், நதிநீரை தேசியமயமாக்குதல், மாநிலங்கள் மறுசீரமைப்பு போன்ற பல முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்றால் அறிவியலும் ஆராய்ச்சியும் உத்வேகம் பெறும். பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் 2029-க்குள் இந்தியப் பொருளாதாரத்தை 6 டிரில்லியனாக மாற்றும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். நாட்டில் வறுமை ஒழியும். தொழில் வளம் பெருகும். நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் அதிகரிக்கும். உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா வலுவாக உயர்ந்து நிற்கும். இப்படி பல நுாறு நன்மைகள் உள்ளன என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 13 March 2024 5:23 AM GMT

Related News