/* */

Positive God Quotes in Tamil கடவுளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்

மனிதனால் தன்னை விட ஆற்றல் மிக்க ஒருவர் உண்டு என்பதை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நம்மைவிட ஆற்றல் மிக்க இறைவனை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது

HIGHLIGHTS

Positive God Quotes in Tamil கடவுளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
X

இந்த பூமியில் வாழும் மிகச்சிறந்த மற்றும் மிக ஆற்றல் மிக்க ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே, அதனால்தான் என்னமோ மனிதனால் தன்னை விட ஆற்றல் மிக்க ஒருவர் உண்டு என்பதை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்குக் காரணம் அகந்தை மட்டுமல்ல அவனது அறியாமையும் கூட, நம்மை விட ஆற்றல் மிக்க ஒன்றை நம்மால் எப்படி முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

ஒரு மனிதனால் ஒரு மாட்டை புரிந்துகொள்ள முடியும் ஆனால் ஒரு மாட்டால் மனிதனை புரிந்துகொள்ள முடியாது, அதுபோலவே நம்மைவிட ஆற்றல் மிக்க இறைவனை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.

மனித அறிவால் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்தால் அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும். மனித அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தால்தானே அவர் கடவுள். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பார்கள் அது முற்றிலும் உண்மை, கடவுள் விஷயத்தில் நாம் அனைவரும் கண் பார்வை இல்லாதவர்களை போன்றவர்கள். ஒவ்வொருவரும் தடவிப்பார்த்து ஒவ்வொன்றைக் கூறலாம் ஆனால் உண்மை என்னவென்று படைத்தவனுக்கே தெரியும்.

இந்த பதிவில் இறைவை குறித்த சில பொன்மொழிகளை அளித்துள்ளோம்

நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய், நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!!

உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன் மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு. தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று நம்பிக்கையோடு இரு!

உங்களையும் இறைவனையும் இணைக்கும் ஊசியாக குரு இருக்கின்றார்.. நூலாக நீங்கள் அவரை பின்தொடர்வதின் மூலமே இரண்டற கலக்க முடியும்.


பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள். படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள். அதுதான் வாழ்க்கை ...

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்.. அனைத்தையும் ரசிக்க கற்றுக்கொள்..!

இறைவனின் கருணை உள்ளம் தான். கொசுவின் கொடுக்கில் தேளின் விஷம் வைக்கப்படவில்லை என்பது...

கடவுள் இருப்பிடம் கல்லிலோ, மரக் கட்டையிலோ, மண்ணிலேயோ இல்லை. மனிதர்களின் உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும்தான்...!

இறைவா எந்த மனிதனிடத்தில் துயரத்தை சொன்னாலும் கேலி செய்வான். நீ அவற்றை பொறுமையாக கேட்கவேண்டும் என்றுதான் உன்னை கல்லாக படைத்திருக்கிறார்கள் - கண்ணதாசன்


கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை, என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுள் பக்கமே உள்ளது கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.

கடவுளை நம்புவது நம்பிக்கை உன்னை நீ நம்புவது தன்னம்பிக்கை

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். - கவிஞர் கண்ணதாசன்

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

கருணையோடு இருப்பவர்கள் எல்லாம் கடவுளின் மறுபிறவிகளே

பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால்.. செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்....

காரணம் இல்லாமல். கவலை கொள்ளாதே

காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே

எதுவும் கடந்து போகும்... இதுவும் கடந்து போகும்..

தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா. - அகத்தியர்

கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும், சாபம் ஆக்குவதும் உன் கையில்தான் உள்ளது.


உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இரு....! இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இரு..! |

கவலைகளை அம்மாவிடம் சொல்லிவிட்டேன். இனி கடவுளை அவள் பார்த்துக்கொள்வாள்..

உன்னை விட உனது பிரச்சனைகளை பற்றி உன்னை படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் மீது முழு நம்பிக்கை வை, அவன் உன்னை காப்பான்.

எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்!

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்.

நினைப்பவை எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நல்ல முறையில் நடக்கும்..! கடவுள் ஆசைப்பட்டால் மட்டும்

நஞ்சு கூட நன்மை பயக்கும் நமசிவாய நாமம் போற்றினால் !!

கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு நாம் தினமும் போடுகின்றோம் வேஷம்!

கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம். எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்..!

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் ஈவ் உடல் படைக்க பட்டிருக்கிறது

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்.


பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

- இராமலிங்க அடிகளார்


பக்தி என்பது நம் ஆசைகளை கட்டுப்படுத்த தானே தவிர, நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல...

படைத்தவன் துணை இருக்க.. அடுத்தவன் துணை எதற்கு..?

"சாவி" இல்லாத பூட்டை "மனிதன்" உருவாக்குவதில்லை ! அதுப்போல "தீர்வு” இல்லாத பிரச்சனைகளை "இறைவனும்" அனுமதிப்பதில்லை !

நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்!

என் இயேசு மட்டுமே அறிவார்...... என் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத சில கண்ணீர் துளிகளை!

சிந்தனையற்ற தனிமை வேண்டும், மனம் மரத்திட வேண்டும்.

தன்னிலை மறந்திருக்க வேண்டும், மயக்கம் அறுத்திட வேண்டும்.

உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உ

ன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்.

உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள். உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் ஈவ் உடல் படைக்க பட்டிருக்கிறது

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

நஞ்சு கூட நன்மை பயக்கும் நமசிவாய நாமம் போற்றினால் !!

நினைப்பவை எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நல்ல முறையில் நடக்கும்..! கடவுள் ஆசைப்பட்டால் மட்டும்..!!

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே... உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்...!

எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்!

Updated On: 26 Nov 2023 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...