/* */

Vallalar in Tamil: வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை போதனைகள்

Vallalar in Tamil: வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை போதனைகள்

HIGHLIGHTS

Vallalar in Tamil: வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை போதனைகள்
X

Vallalar in Tamil: வள்ளலார் என்றழைக்கப்படும் திருவருட்பாவை எழுதிய இராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய பெற்றோர் இராமையா பிள்ளை- சின்னம்மையார்.

இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளது. ஆறு திருமறைகளாக பகுப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளின் தலைமைச சீடர் தொழூவர் வேயுதம் அவர்கள் முதன் முதலில் இவருடைய பாடல்களை நான்கு திருமுறைகளாக பகுத்து வெளியிட்டார்.

வள்ளலார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர், போதகாசிரியர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப் பிணி போக்கிய அருளாளர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, தீர்க்கதரிசி மற்றும் சிறந்த தமிழ் மொழி ஆய்வாளர் ஆவார்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை அறிவுரைகள்:

  • வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
  • தேவைக்கு செலவிடு.
  • அனுபவிக்க தகுந்தன அனுபவி.
  • இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
  • மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
  • இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
  • உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
  • மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
  • உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
  • உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
  • உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
  • உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
  • அவ்வப்போது பரிசுகள் அளி.
  • அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
  • பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
  • அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
  • உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
  • அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
  • “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
  • இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
  • ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
  • “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
  • எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
  • மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
  • மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
  • அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
  • பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
  • நண்பர்களிடம் அளவளாவு.
  • நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
  • இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
  • வாழ்வை கண்டு களி!
  • ரசனையோடு வாழ்!
  • வாழ்க்கை வாழ்வதற்கே!
  • நான்கு நபர்களை புறக்கணி!
    மடையன், சுயநலக்காரன், முட்டாள், ஓய்வாக இருப்பவன்
  • நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
    பொய்யன், துரோகி, பொறாமைக்கைரன், மமதை பிடித்தவன்
  • நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
    அனாதை, ஏழை, முதியவர், நோயாளி
  • நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
    மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன்
  • நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
    பொறுமை, சாந்த குணம், அறிவு, அன்பு
  • நான்கு நபர்களை வெறுக்காதே!
    தந்தை, தாய், சகோதரன், சகோதரி
  • நான்கு விசயங்களை குறை!
    உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு
  • நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
    துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம்
  • நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
    மனத்தூய்மை உள்ளவன், வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையாளன்
  • நான்கு விசயங்கள் செய்!
    தியானம்-யோகா, நூல் வாசிப்பு, உடற்பயிற்சி, சேவை செய்தல்
Updated On: 26 Nov 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு