/* */

விரைவில் ஓய்வு பெறும் ரோஹித்..? ரசிகர்கள் அதிர்ச்சி...!

விரைவில் ஓய்வு பெறும் ரோஹித்..? ரசிகர்கள் அதிர்ச்சி...!

HIGHLIGHTS

விரைவில் ஓய்வு பெறும் ரோஹித்..? ரசிகர்கள் அதிர்ச்சி...!
X

ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து நீக்கப்பட்டதன் மூலமாக, ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு முதல் மும்பை கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, அடுத்தடுத்து 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். 2015ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணியின் தலைவர் என்ற அவப்பெயர் ரோகித் சர்மாவை பின்தொடர்ந்து வந்தது. அதோடு, கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணிக்காக ரோகித் சர்மா ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை.

அடுத்த டி20 உலகக்கோப்பையின் போது ரோகித் சர்மா 38 வயதை எட்டிவிடுவார் என்பதால், ஃபார்மில் இருப்பாரா, அப்படி இருந்தாலும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்து வந்தது.

முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி விளையாட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், ரோகித் சர்மாவின் டி20 கிரிக்கெட் வாழ்க்கைக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது அவரின் சம்மதத்துடன்தான் நடந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மும்பை அணி முடிவுக்கு எதிர்ப்பு

ரசிகர்கள் பலரும் மும்பை அணியின் இந்த முடிவை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு அவர் இடத்தில் ஹர்டிக் பாண்டியாவை நியமிக்க என்ன அவசியம் வந்துவிட்டது. உலக கோப்பைத் தொடரில் தொடர்ந்து 10 வெற்றிகளை வாங்கித் தந்தவர் ரோஹித் சர்மா. ஐபிஎல்லில் தொடர்ந்து வெற்றிகரமான அணியாக மும்பை அணி திகழ முழுக்க முழுக்க அவர்தான் காரணம். ஆனால் அந்த நன்றியை காண்பிக்காமல், வெளியில் சென்று திரும்பி வந்தவருக்கு கேப்டன் பதவி கொடுக்கிறார்கள் என கடுமையாக சாடியுள்ளனர் ரசிகர்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வார்

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், இனி அவர் சச்சின் எப்படி ஒரு சீசனில் சில போட்டிகளில் மட்டும் விளையாடினாரோ அதேபோல் அடுத்த ஐபிஎல் சீசனில் ரோகித் சர்மா ஆடுவார் என்று பார்க்கப்படுகிறது. கடந்த சீசனிலேயே ஒரேயொரு அரைசதம் மட்டுமே ரோகித் சர்மா அடித்திருந்த நிலையில், அடுத்த சீசனில் களமிறங்குவதும் சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது.

இதனால், விரைவில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 37 வயதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான ஃபார்மில் உள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடினார்.

இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான வீரராக ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 16 Dec 2023 6:15 AM GMT

Related News