/* */

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்

பலத்த மழையால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

HIGHLIGHTS

பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்
X

வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் தவித்த மக்களை பைபர் போட் மூலம் மீட்டு வரும் பேரிடர் மீட்பு குழுவினர்.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் சென்னை மாநகர மக்கள் மட்டும் இன்றி புறநகர் பகுதி மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து உள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மின்சாரம் இல்லை, வெளியில் செல்வதற்கு போக்குவரத்தும் இல்லை. இதன் காரணமாக மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி போன்ற புறநகர் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு தெருக்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. மாடி வீடும் சேர்த்து கட்டி இருப்பவர்கள் மாடியில் தங்கி இருக்கிறார்கள்.

தரைத்தளத்தில் மட்டும் குடியிருப்பவர்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் அவசர உதவிக்கு தீயணைப்பு துறைக்கும் பேரிடர் மேலாண்மை துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு படகுக்காக காத்திருக்கிறார்கள். இப்படி தவிக்கும் மக்களை ரப்பர் படகு மற்றும் பைபர் போட் எனப்படும் படகுகளின் மூலம் பேரிடர் மீட்பு துறையினர் மீட்டு அருகில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள். சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழையால் கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதாக சென்னைவாசிகள் புலம்பி வருகிறார்கள்.

Updated On: 5 Dec 2023 5:11 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  4. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  5. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  6. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!