நாடு முழுக்க மின்தடை.. அட என்னப்பா இது? புரியாமல் முழித்த மக்கள்..!
நாடு முழுக்க மின்தடை.. அட என்னப்பா இது என்று அரசின் மீது அதிருப்தியில் நாட்டு மக்கள்..!
HIGHLIGHTS
என்னப்பா இது.. ஆவூன்னா கரெண்ட்ட கட் பண்ணி உட்டுர்றாய்ங்க.. கடுப்பா இருக்கே என நம்ம ஊரில் புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்போம். நாமே பல நேரங்களில் எரிச்சல் அடைந்திருப்போம். ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே சமயத்தில் கரண்ட் கட் நிகழ்ந்தால் அந்த நாட்டு மக்களின் நிலைமை எப்படி இருக்கும். ஆப்பிரிக்காவில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று மொத்தமாக மின்சாரம் தடைபட்டதை அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அரசைப் பற்றி மக்கள் குறை கூறி வருகின்றனர்.
உள்ளூர் நேரப்படி, இரவு 8 மணிக்கு மின்சாரம் மொத்தமாக தடைபட்டுள்ளது. மட்டுமின்றி, கடந்த நான்கு மாதங்களில், நாடு முழுவதுமாக மின்சாரம் தடைபடுவது இது மூன்றாவது முறை என்றும் கூறப்படுகிறது.
மின்சாரம் தடைபட்டதால், அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் இரண்டு டெர்மினல்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது.
இதன் காரணமாக, விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
மின்சாரம் தடைபட்டதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள் மற்றும் மின்சார கருவிகளில் உள்ள உணவுகள் கெட்டுப்போனது.
மேலும், மக்கள் தங்களின் வேலைகளை செய்வதற்கும், வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சிரமப்பட்டனர்.
இந்த மின் தடை குறித்து கென்ய மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். "மின்சாரம் தடை என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், "மின்சாரம் தடை என்பது அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடு" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், திங்களன்று பகல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் திரும்பியது. ஆனால், நைரோபியின் சில பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.
மின்சாரம் தடைபட்டதற்கு கென்யா மின்சாரத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இது தங்களுக்கு வருமான இழப்பு, உணவு கெட்டுப்போதல் மற்றும் நேர இழப்புக்கு வழிவகுத்துள்ளது என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, நாட்டில் மீண்டும் ஒரு மின் தடை ஏற்ப்படதற்கு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதுபோன்ற நிலை இனி ஏற்படாது என ஆகஸ்டு மாதம் அவர் உறுதி அளித்துள்ளதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், தற்போது ஏற்பட்ட மின் தடை என்பது நாசகாரர்களின் செயல் என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கென்யா அரசு விசாரணை நடத்தி வருகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.