/* */

பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால், ஜவுளித்தொழில் முடக்கம்: அமைச்சர் சாமிநாதன்

பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால் கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளி தொழில் முற்றிலும் முடங்கி விட்டதாக அமைச்சர் சாமிநாதன் பேசியுள்ளார்.

HIGHLIGHTS

பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால், ஜவுளித்தொழில் முடக்கம்: அமைச்சர் சாமிநாதன்
X

தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் சாமிநாதன்.

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் வாக்குசேகரித்த கணபதி ராஜ்குமார் பேசுகையில், ”முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். தொழில் துறையாக இருந்தாலும் சரி, நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்த அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கல்வி வளர்ச்சியிலும் சரி, பெண்கள் முன்னேற்றமாக இருந்தாலும் சரி பார்த்து பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது.

ஆனால், இதற்கு நேர் எதிரான அரசாக பாஜக உள்ளது. 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். 10 ஆண்டு காலம் போதாது என்று பதவிக்காக ஆசைப்பட்டு மீண்டும் மக்களை தேடி வாக்கு சேகரிக்க வருகின்றனர். மக்களுக்காக, தொழில் வளர்ச்சிக்காக, வேலைவாய்ப்பிற்காக பாஜக அரசு என்ன செய்தது என அவர்களிடம் கேளுங்கள். உள்ளூரை சேர்ந்த என்னை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம். உங்களில் ஒருவனாக உங்களுக்கு பணியாற்ற காத்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு அந்த வாய்ப்பை தாருங்கள். முதல்வர் தளபதியின் உத்திரவிற்கு இணங்க மக்களோடு மக்களாக நான் இருப்பேன் என கூறினார்.

தொடர்ந்து, தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், பள்ளபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”திமுகவிற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் தவறான ஜவுளி கொள்கையால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் சோமனூர் பகுதிகளில் ஜவுளி தொழில் முற்றிலும் முடங்கி விட்டது. இங்கு துணி ஏற்றுமதி செய்வது தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து தற்போது இங்கு இறக்குமதி செய்யப்பட்ட துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்களைப் போலவே, இந்தியா கூட்டணி அரசும் அறிவித்துள்ள மகாலட்சுமி திட்டம். வருடம் ஒன்றுக்கு குடும்ப பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கக்கூடிய வகையில் சிறப்பான செயல் திட்டங்களை அறிவித்துள்ளது. கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் பொழுது, அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஒன்றியத்தில் ஊழல் ஆட்சியை விரட்ட, இந்தியா கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு வாக்கு இயந்திரத்தில் மூன்றாவது பட்டனை அமுத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Updated On: 9 April 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  2. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  3. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  6. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  7. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  8. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  9. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  10. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...