/* */

தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர் அசத்தல்

700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார்

HIGHLIGHTS

தங்கத்தில் ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்கள் ஓவியம்: கோவை ஓவியர் அசத்தல்
X

மெமரி கார்டுகளில் வரையப்பட்டுள்ள தங்க ஓவியம்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு. எம். டி. ராஜா. தங்க நகை தொழிலாளியான இவர், ஓவியம் வரைதல் மற்றும் கலை பொருட்கள் உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் அடிக்கடி கலை பொருட்கள் மூலம் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உழவர்களை வணங்கும் விதமாகவும் மெமரி கார்டுகளின் பின் பகுதியில் தங்கத்தில் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் இதற்காக செலவழித்து இந்த ஓவியங்களை வரைந்து இருப்பதாக யு.எம்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jan 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...