/* */

ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

கும்பாபிஷேகத்திற்கு காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆகும்.

சுற்றியுள்ள ராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊருக்கு, தலைமை மாரியம்மனாக இந்த கோவில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று பம்பை மேளதாளங்கள் முழங்க , வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மலையனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அழகாகவுண்டனூரில் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த யாக பூஜைகளை இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

Updated On: 9 Dec 2023 2:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு