/* */

திண்டுக்கல் மாவட்ட செய்திகள், கிராமத்தில் குளம் போல தேங்கியுள்ள நீர்:

பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்ட செய்திகள், கிராமத்தில் குளம் போல தேங்கியுள்ள நீர்:
X

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கிராமத்தில் தேங்கியுள்ள மழை நீர்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், சொக்குப் பிள்ளை பெட்டி ஏழாவது வார்டில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இவ்வாறு மழைநீர் தேங்கி இருப்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் இருப்பதால், இதை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, மழைநீர் தேங்காத வண்ணம் சீரமைக்க நடவடிக்கை எடுத்து சரி செய்யும் படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆத்தூர் தாலுகா, அலுவலகம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் சாலையை பராமரித்திட வேண்டி கோரிக்கை:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்திற்கு ஆத்தூர் தாலுகா பகுதிகளான சின்னாளப்பட்டி, சீவல் சரகு, ஆத்தூர், சித்தையன் கோட்டை, சித்தரேவு , அய்யம் பாளையம், பெரும்பாறை, மணலூர் ஆகிய கிராமப்புற பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் , ஆத்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி ஆத்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சீரமைத்து தந்து உதவிட வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது, தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமியின் தொகுதி ஆகும். அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Updated On: 2 Jan 2024 11:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  4. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  6. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  7. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  8. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...