/* */

ஈரோடு மாவட்டத்தில் 192.50 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 192.50 மில்லி மீட்டா் மழை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்தது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 192.50 மி.மீ மழை பதிவு
X

அத்தாணி - சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் அவதியடைந்து வந்தனர். எனினும், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் 2 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து 2.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர், இடியுடன் கூடிய கனமழையாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதேபோல, பெருந்துறை அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரிப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக, அத்தாணி - சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதேபோல், கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 28.00 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் - 23.20 மி.மீ ,

பவானி - 19.40 மி.மீ ,

பெருந்துறை - 40.00 மி.மீ ,

கொடுமுடி - 6.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 1.20 மி.மீ ,

கவுந்தப்பாடி - 9.40 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 5.40 மி.மீ ,

அம்மாபேட்டை - 23.40 மி.மீ ,

பவானிசாகர் அணை - 2.40 மி.மீ ,

கொடிவேரி அணை - 3.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 7.80 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 23.30 மி.மீ

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 192.50 மி.மீ ஆகவும் , சராசரியாக 11.32 சதவீதமாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 30 Oct 2023 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...