30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற நாமக்கல் மாநகராட்சி அழைப்பு

30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ரூ. 5,000 வரை    தள்ளுபடி பெற நாமக்கல் மாநகராட்சி அழைப்பு
X

மகேஷ்வரி, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்.

நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும் 30ம் தேதி க்குள் செலுத்தி, 5 சதவீதம் முதல், அதிகபட்சம் ரூ. 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும் 30ம் தேதி க்குள் செலுத்தி, 5 சதவீதம் முதல், அதிகபட்சம் ரூ. 5,000 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஷ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், 2025-26ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை, வரும், 30ம் தேதி க்குள் செலுத்தினால், சொத்துவரியில் 5 சதவீதம் முதல், அதிகபட்சமாக ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற்று பயன்பெறலாம். மேலும், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அனைவரும், 2025-26ம் நிதியாண்டில், முதலாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும் 30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, வரும், அக். 31க்கும் முன்பும் செலுத்தி, அபராதங்களை தவிர்த்து, அரசு வழங்கும் தள்ளுபடியான சொத்துவரியில் 5 சதவீதம் முதல், அதிகபட்டசம் ரூ. 5,000 வரை தள்ளுபடி பெற்று பயன் பெறலாம். மேற்குறிப்பிட்ட காலங்களில் செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சிக்கு தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
ai in future agriculture