பணியிட மாறுதலில் 51 போலீசார் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை
Erode news- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 51 போலீசார் இடமாறுதலில், ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 51 போலீசார் இடமாறுதலில், ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளனர்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் போலீசாருக்கு தன் விருப்ப பணி இடமாறுதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 51 போலீசார் ஈரோடு மாவட்டத்திற்கு விருப்ப இடமாறுதல் பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் போலீசார் விருப்ப மாறுதல் கோரி சமீபத்தில் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிற மாவட்டங்களில் இருந்து, 51 போலீசார் ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளனர். அவர்கள் விரைவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொறுப்பேற்று பணியாற்ற உள்ளனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 11 பேர் பிற மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தன் விருப்ப இடமாறுதல் பெற்றிருப்பதால், இந்த உத்தரவை ரத்து செய்ய இயலாதென போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினார்.