/* */

கீழ்பவானி வாய்க்காலில் 3வது சுற்று தண்ணீர் திறப்பு

Bhavanisagar Dam 3rd Round Water Opened பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 3வது சுற்றுக்கான தண்ணீர் வெள்ளிக்கிழமை (இன்று) காலை திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்காலில் 3வது   சுற்று தண்ணீர் திறப்பு
X

பவானிசாகர் அணை.

Bhavanisagar Dam 3rd Round Water Opened

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 3வது சுற்றுக்கான தண்ணீர் வெள்ளிக்கிழமை (இன்று) காலை திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 11,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில் 5 சுற்றுகளாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, கீழ்பவானி பாசனத்துக்காக திறக்கப்பட்ட 2வது சுற்று தண்ணீர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (மார்ச் 01) இன்று காலை 10 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் 3வது சுற்று தண்ணீர் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.74 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 1,300 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 March 2024 7:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி