ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரிக்கு பிரிவு உபசரிப்பு விழா
Erode news- ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத்நகரில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத்நகரில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி டி.எப்.ஓ., புளுகாண்டிக்கு பிரிவு உபசரிப்பு விழா சம்பத் நகர் மெயின் ரோட்டில் உள்ள அம்மன் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கவிதாலயம் மற்றும் கவிதரலயம் இசைப் பயிற்சிப் பள்ளி இணைந்து பிரிவு உபசரிப்பு விழாவை நடத்தியது.
விழாவில் ஈரோடு மாவட்டத்தில் 20.02.2020 முதல் 08.02.2024 வரை 4 வருடங்கள் மாவட்ட தலைமை தீயணைப்புத் துறை அதிகரிரயாக புளுகாண்டி பணியாற்றி கோவை மாநகர தலைமை தீயணைப்புத்துறை அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். மாநகர பொதுமக்கள் சார்பாக, இவரது சேவையை பாராட்டி நிஷாந்த் மருத்துவமனை டாக்டர் சுமதி பத்மநாபன், கவிதாலயம் ராமலிங்கம் இணைந்து ஷீல்டு வழங்கி கௌரவப் படுத்தினர்.
இவ்விழாவில், அவரது துணைவியார் விஜயா புளுகாண்டி, வெங்கடேஷ், கொளந்தசாமி, கணபதி டெக்கர்ஸ் தர்மன், ஆர். எஸ். டிரேடர்ஸ் உரிமையாளர் மாரிதாஸ், தங்கம் கேட்டரிங் உரிமையாளர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.