/* */

ஈரோடு மாவட்ட தேவர் பேரவை 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழா

ஈரோடு மாவட்ட தேவர் பேரவையின் 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட தேவர் பேரவை 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழா
X

தேவர் பேரவையின் 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்ட தேவர் பேரவையின் 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தேவர் பேரவையின் 35ம் ஆண்டு கல்வி ஊக்கப் பரிசு விழா மற்றும் பசும்பொன் தேவர் 116 ஜெயந்தி விழா மருது பாண்டியர் 222வது குருபூஜை மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் 294 ஜெயந்தி விழா ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத் தலைவர் பேங்க் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பிரியா அழகேசன் வரவேற்றார். விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர் 100 பேருக்கு கல்வி ஊக்க பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட அவை தலைவர் அர்சுணத் தேவர், இணைச் செயலாளர் அன்பழகன், மாநகர செயலாளர் கோச்சடை தேவர், மாநகரத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்பாண்டி தேவர், முன்னாள் கவுன்சிலர் கோபால், முத்து, பிரஸ் ஜீவானந்தம், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராவண ஈஸ்வரன், முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட கவுரவத் தலைவர் ஆறுமுக தேவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தோப்பு துரைசாமி, சென்னிமலை சுபாஷ் மக்களை இயக்க பொதுச்செயலாளர் தங்கமணி, சமூக சேவகர் ராஜ்கிருஷ்ணா, பார்வார்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். விழா முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் கோபால்சாமி தேவர் நன்றி கூறினார்

Updated On: 20 Feb 2024 6:15 AM GMT

Related News