/* */

திம்பம் மலைப்பாதை சாலை தடுப்புச் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையோரத் தடுப்புச் சுவா் மீது சிறுத்தை படுத்திருந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

HIGHLIGHTS

திம்பம் மலைப்பாதை சாலை தடுப்புச் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை
X

திம்பம் மலைப்பாதை சாலையோரத் தடுப்புச் சுவர் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுத்தை

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை சாலையோரத் தடுப்புச் சுவா் மீது சிறுத்தை படுத்திருந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் திம்பம் மலைப்பாதை சாலையில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் 3வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோரத் தடுப்புச் சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக காரில் சென்றவர்கள் சிறுத்தை படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை காரில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர், காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது, தடுப்புச் சுவர் மீது சிறுத்தை படுத்திருக்கும் வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 8 April 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  2. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  4. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  6. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  7. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  8. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  9. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  10. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்