/* */

சென்னிமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை, பக்தர்கள் ஓய்வு மண்டபங்கள் திறப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபங்களை அமைச்சர் சாமிநாதன் புதன்கிழமை (இன்று) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சென்னிமலை முருகன் கோவிலில் முடி காணிக்கை, பக்தர்கள் ஓய்வு மண்டபங்கள் திறப்பு
X

Erode news- சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபத்தை அமைச்சர் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபங்களை அமைச்சர் சாமிநாதன் புதன்கிழமை (இன்று) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம் மற்றும் மலைக்கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபத்தை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம் மற்றும் தன்னார்வலர் பங்களிப்பில் (சக்தி மசாலா நிறுவனம்) ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மலைக்கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் என ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து, தலை முடி மழிக்கும் 11 பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் சரவணன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம். சிவக்குமார், சக்தி மசாலா நிறுவன நிர்வாகிகள் டாக்டர் துரைசாமி, சாந்தி துரைசாமி, பெருந்துறை வட்டாட்சியர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?