/* */

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா
X

கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றிய பக்தர்கள்.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.


அதைத்தொடர்ந்து, நேற்று (23ம் தேதி) இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. முன்னதாக இரவு 11.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை நடந்தது. இரவு 1 மணிக்கு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் பூசி, காப்பு கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கம்பங்களை கோவில்களின் பூசாரிகள், மேளதாளங்கள் முழங்க தோளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர்.

ஊர்வலம் பெரியார் வீதி, கச்சேரி வீதி, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் முதல் கம்பம் பெரியமாரியம்மன் கோவிலிலும், 2வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலிலும், 3வது கம்பம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது. இந்த விழாவில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 24 March 2024 5:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி