/* */

தந்தையின் உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகன்..!

ஈரோடு அருகே தந்தையின் கை, கால்களை கட்டி உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தந்தையின் உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகன்..!
X

உயிரிழந்த நந்தகுமாரின் உடல் ஜமக்காளத்தை கொண்டு சுற்றி கட்டப்பட்டுள்ளதையும், வீட்டில் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணா பாயையும் படத்தில் காணலாம்.

ஈரோடு அருகே தந்தையின் கை, கால்களை கட்டி உடலை ஜமுக்காளத்தால் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர் காலிங்கராயன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் நந்தகுமார் (வயது 62). இவரது, மனைவி கிருஷ்ணாபாய். இவர்களது மகன் மோத்தி (வயது 44). இந்நிலையில், இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், கடந்த மூன்று நாட்களாக வீடும் பூட்டப்பட்டிருந்ததால் அப்பகுதியினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, ஹாலில் கட்டிலுக்கு அடியில் ஜமக்காளத்தில் சுற்றப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு நந்தகுமார் அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்து மோப்ப நாய் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

இந்நிலையில், மகன் மோத்தியிடம் சித்தோடு போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமாருக்கும் அவரது மனைவி கிருஷ்ணாபாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மோத்தி தனது தாய் கிருஷ்ணாபாயை ஜவுளி நகரில் வாடகைக்கு வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்குத் தேவையான மளிகை பொருட்களை வாரம் ஒருமுறை வாங்கிக் கொடுத்ததோடு வீட்டை பூட்டி விட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த வாரம் உயிரிழந்த நந்தகுமாரை என்ன செய்வதென தெரியாமல் கை கால்களை கட்டிப் போட்டும், தனது தந்தை மீண்டும் எழுந்து வருவார் என நம்பிக்கையில் மகன் மோத்தி தொடர்ந்து பராமரித்து வந்துள்ளதும் கை, கால்கள் வீங்கியதால் வீக்கத்தை குறைக்க பெட் சீட்டை வைத்து கட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஜவுளிநகர் சென்ற பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையிலான போலீசார் அங்கு பூட்டப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து. உடல் மெலிந்து காணப்பட்ட கிருஷ்ணாபாயை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சித்தோடு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 7 April 2024 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு