/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.28 கோடி பொருட்கள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை 4 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரத்து 720 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.28 கோடி பொருட்கள் பறிமுதல்
X

Erode news- தேர்தல் பறக்கும் படை குழு.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை 4 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரத்து 720 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (ஏப்ரல் 4) வியாழக்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 607ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.84 லட்சத்து 19 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரத்து 810ம், பவானி தொகுதியில் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம் பறிமுதல் செய்ய்துள்ளனர்.

இதேபோல், கோபி தொகுதியில் ரூ.27 லட்சத்து 22 ஆயிரத்து 130ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்து 236ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 200 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.3 கோடியே 20 லட்சத்து 47 ஆயிரத்து 493 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரத்து 227 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 17 ஆயிரத்து 645 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 21 லட்சத்து 29 ஆயிரத்து 848 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Updated On: 4 April 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு