/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.33 கோடி பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை 4 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரத்து 710 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.33 கோடி பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை 4 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரத்து 710 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (ஏப்.,5) வெள்ளிக்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 607ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.84 லட்சத்து 19 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.27 லட்சத்து 56 ஆயிரத்து 150ம், பவானி தொகுதியில் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 750ம் பறிமுதல் செய்ய்துள்ளனர்.

இதேபோல், கோபி தொகுதியில் ரூ.27 லட்சத்து 22 ஆயிரத்து 130ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.75 லட்சத்து 64 ஆயிரத்து 886ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 205 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 383 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 327 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், ரொக்கப் பணம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரத்து 405 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 978 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Updated On: 5 April 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  2. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  4. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  5. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  6. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  7. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  8. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  10. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....