ஈரோட்டில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்..!
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமை தாங்கினார். இதில், மத்திய அரசு கொப்பரையை நாபெட் மூலம் ஒரு கிலோ ரூ.106 என்ற விலையில் கொள்முதல் செய்கிறது. அதனை மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது. இதனால் கொப்பரை விலை உயராத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே, மலேசியாவில் இருந்து பாமாயிலை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தியாகும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மேலும், சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில சட்ட விழிப்புணர்வு பிரிவு செயலாளர் சதீஷ்குமார், ஈரோடு கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேஷ் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.