/* */

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்..!

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்..!
X

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக் கோரி ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமை தாங்கினார். இதில், மத்திய அரசு கொப்பரையை நாபெட் மூலம் ஒரு கிலோ ரூ.106 என்ற விலையில் கொள்முதல் செய்கிறது. அதனை மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறது. இதனால் கொப்பரை விலை உயராத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

எனவே, மலேசியாவில் இருந்து பாமாயிலை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தியாகும். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மேலும், சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில சட்ட விழிப்புணர்வு பிரிவு செயலாளர் சதீஷ்குமார், ஈரோடு கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேஷ் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Feb 2024 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  2. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  6. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  8. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  9. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...