/* */

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி..!

மல்லியங்கரணை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் வீடு திரும்பும் போது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 7ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி..!
X

உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் ஆட்டோவை மீட்ட காவல்துறை.

உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் ரோஹித் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயம் அடைந்த மாணவ மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் அடுத்துள்ள மல்லியங்கரணை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாடாதவூரில் இருந்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஆட்டோ மூலம் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் 13 மாணவ மாணவிகள் வாடாதவூர் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கடல்மங்கலம் ஏரிக்கரை அருகே ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இதில் ரோஹித் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் தலையில் பழுத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்ததார். மேலும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட அதில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மாணவ மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோ ஓட்டுனர் பாலாஜி என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர் உயிரிழந்ததுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் வாடாதவூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி ஒரு கண்ணோட்டம்

சோகம் சூழ்ந்த வாடாதவூர்:

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள கடல்மங்கலம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், ஏழாம் வகுப்பு மாணவர் ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 12 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ: மல்லியங்கரணையில் செயல்படும் தனியார் பள்ளியில் வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாததால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆட்டோ மூலம் பள்ளிக்கு அனுப்பி வந்தனர்.

பள்ளி முடிந்ததும் விபத்து: இன்று மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்ததும், 13 மாணவ, மாணவிகள் ஆட்டோவில் வாடாதவூர் நோக்கி சென்றனர். கடல்மங்கலம் ஏரிக்கரை அருகே, டிரைவர் பாலாஜியின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவர்: ரோஹித் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் உட்பட மற்ற 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை: பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாணவ, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட டிரைவர்: உத்திரமேரூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, டிரைவர் பாலாஜியை கைது செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சோகத்தில் மூழ்கிய கிராமம்: வாடாதவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்ததுடன், மற்ற மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

பல்வேறு கேள்விகள்: போதிய பாதுகாப்பு இல்லாத ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது, டிரைவர் மீது நடவடிக்கை, மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விபத்து நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 March 2024 5:58 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...