/* */

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்; பேரணியாக சென்று வழிபாடு

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தின விழாவையொட்டி, நாகர்கோவிலில் இருந்து தலைமை பதி சாமிதோப்பிற்கு அய்யா வழி பக்தர்கள் பேரணியாக சென்றனர்.

HIGHLIGHTS

அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினம்; பேரணியாக  சென்று வழிபாடு
X

அய்யா வைகுண்டர் அவதார தின பேரணி 

அய்யா வைகுண்டர் வரலாறு:

கடலுக்குள் இருந்து திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்த 'அய்யா வைகுண்டர்', அங்கிருந்து தவம் செய்ய குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்புக்கு வந்துள்ளார். இவர் அவதாரம் எடுத்து வந்த காலத்தில், அடக்குமுறைகள் அதிகமாக இருந்து வந்துள்ளது. கீழ் சாதி என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியக்கூடாது, தலைப்பாகை அணியக்கூடாது. பெண்கள் மேலாடை அணியக்கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகள் அப்போதைய ஆட்சியில் இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர் ஆறு வருடங்கள் சிவனை நோக்கி தவம் இருந்துள்ளார். அய்யா வைகுண்டரை அனைத்து தரப்பு மக்களும் தேடிவந்து பார்த்து ஆசீர்வாதம் பெற்றனர். தன்னை நாடிவந்த பக்தர்களின் மனதில் ஒற்றுமையை இவர் ஏற்படுத்தினார். அனைத்து சாதி மக்களும் ஒரே கிணற்றில் குடிக்கவும், குளிக்கவும் வேண்டும், தன்னை நாடிவரும் பக்தர்களில் ஆண்கள் தலைப்பாகை அணிய வேண்டும் என்றும் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்றும் போதித்துள்ளார்.

இதனையடுத்து அவர், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட்டர். அதன் பிறகு சாமி தோப்புக்கு வந்த அய்யா வைகுண்டர், மக்களைத் திரட்டி மக்களின் வழிபாடு முறைகளை மாற்றி புரட்சிகளை ஏற்படுத்தினார். எனவே, பக்தர்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.

அய்யா வைகுண்டரின் தலைமை பதி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசி 20ஆம் தேதி சாமி தோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், அய்யா வைகுண்டரின் 192வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.


இதனையொட்டி, நாகர்கோவில் உள்ள நாகராஜா கோயில் திடலில் இருந்து பிரம்மாண்டமான ஊர்வலம் சாமிதோப்பில் அமைந்துள்ள தலைமை பதிக்கு புறப்பட்டு சென்றது. முன்னதாக, திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரிலிருந்து வாகன பேரணிகள் நேற்றிரவு நாகராஜா கோயில் திடலுக்கு வந்தடைந்தன. இதே போன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாகராஜா கோயில் திடலுக்கு வந்த வாகனங்களில் பேரணியாக வந்தன.

சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து 'வைகுண்ட தீபம்' ஏற்றப்பட்டு அதனைக்கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியோடு அவதார தின விழா தொடங்கியது. விடிய விடிய நாகராஜா கோயில் திடலில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, மாசி மாநாடு நடைபெற்றது. இன்று அதிகாலையில் நாகராஜர் கோயில் திடலிருந்து செண்டை மேளம் முழங்க, கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிப்பாடி அய்யா வழி பக்தர்கள் பேரணியாக புறப்பட்டனர்.

சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொண்டனர். அய்யா வழி பக்தர்களின் பேரணி சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரை குளம் வழியாக தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்பிற்கு சென்றடைய உள்ளது. பகல் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் தலைமை பதியில் வந்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர்.

இந்த பேரணி காரணமாக நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி மார்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அவதார தின விழாவில் இந்த அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 March 2024 7:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்