/* */

விமான தொழில்நுட்பமே தமிழன் கண்டுபிடிச்சதுய்யா..!

முருகன் மயிலில் உலகை சுற்றி வந்தான் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழன் எழுதி வைத்தான்.

HIGHLIGHTS

விமான தொழில்நுட்பமே தமிழன் கண்டுபிடிச்சதுய்யா..!
X

மயில் வாகனம் 

மற்ற இனங்கள் காட்டிலே மிருகங்கள் போல கூட்டம் கூட்டமாக நடந்து திரிந்த காலத்தில் தமிழன் பறந்து உலகை சுற்றுவது பற்றி எழுதி வைத்துள்ளான். மற்ற இனங்கள் ஒரு துவிச்சக்கர வண்டியைக்கூட அறியாத காலத்தில் தமிழன் மயில்வாகனம் என்று பறக்கும் இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளான்.

வாகனம் என்று பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழன் கண்டு பிடித்தது தான் vehicle என்று ஆங்கிலமானது. எவ்வளவோ பறவைகள் இருக்க ஏன் மயில் பறக்கும் வாகனமானது?

இன்றைய விமானங்கள் நூறு வருடங்களுக்கு முன்புதான் கண்டு பிடிக்கப்பட்டது. இன்றைய விமானத்தின் அமைப்பு அப்படியே மயிலை ஒத்தது. விமானத்தை சமப்படுத்த மயிலின் இறகுபோல விமானத்திலும் இருபக்கமும் இருக்கும் அமைப்பு. மயில் தோகை வால் பகுதியில் இருப்பது போல விமானத்தின் பிற்பகுதியில் விமானத்தை உந்தச்செய்யும் அமைப்பு என தமிழன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்துத்தான் இன்றைய விமானம் கண்டு பிடிக்கப்பட்டது.


இராமாயணம் கூட 20 ஆயிரம் வருடங்களுக்கு முந்திய கதை. அதிலே சொல்லப்படும் ஒரு பாடலை பாருங்கள், "தோகை வாகை சுழல் வாயு, தசம தலையன் வான் தொட ஆழி மலையென அடியெடுத்து தோற்ற"

தோகை : மயில் தோகை

வாகை: மயிலின் இறகு

அதாவது இறகும் , தோகையும் சுழலும் வாயுவில் அதாவது காற்றில் தசம தலையன் அதாவது பத்து தலை இராவணன் வானை தொட ஆழி எனப்படும் கடல் மலைபோல் பெரிய அலையை ஏற்படுத்தி தோற்றுபோனது.

20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழனிடம் விமானம் இருந்தது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?

அந்தக்காலத்திலே தானே பெட்ரோலே இல்லையே , பிறகெப்படி விமானம் பறந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அது நியாயமானதுதான்.

மயிலின் தோகையை உற்று பாருங்கள். அப்படியே சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் சோலார் ஒன்றை உற்றுப் பாருங்கள். மயில் தோகையில் இருக்கும் அதே கோடுகள் சோலாரிலும் இருக்கும். ஆம் இராவணனின் விமானம் சூரிய சக்தியில் மின்சாரம் தயாரித்தே பறந்தது. முருகன் காரணமில்லாமல் மயிலை வாகனமாக்கவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இராமாயண காலத்தில் பாவனையில் இருந்த விமானம் ஒன்றின் பகுதிகளை அகல்வாராச்சியின் போது ஆங்கிலேயர் கண்டு பிடித்தனர். அது இலங்கை சிகிரியாவை அண்மித்த காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.

சிதைந்து இருந்த அந்த விமானத்தின் பகுதியை வைத்து ஆங்கிலேயர் அதன் முழு உருவத்தை மீள் அமைத்தனர். அப்படி மீள் அமைக்கப்பட்ட விமானத்தின் படத்தை இணைத்துள்ளேன். இதை அடிப்படையாக வைத்தே ரைட் சகோதரர்கள் விமானத்தை தயார் செய்தனர். உண்மையில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டு பிடிக்கவில்லை, தமிழன் 20 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கண்டு பிடித்ததை மீள் உற்பத்தி செய்தனர்.

ஆங்கிலேயர் இப்படி ஒரு விமான சிதைவு கண்டு பிடித்த கதையையே மறைத்து தமிழருக்கு துரோகம் செய்து விட்டனர். இப்போதுதான் இந்த புகைப்படமே வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரையை கிரேட் பூல் என்ற அமெரிக்க ஆய்வாளர் எழுதியுள்ளது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது.

Updated On: 7 April 2024 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  2. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  5. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  6. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  7. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  9. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  10. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை