/* */

சோழவந்தான் வட்டாரப் பகுதிகளில், எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினர் கொண்டாட்டம்

சோழவந்தான் வட்டாரப் பகுதிகளில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.

HIGHLIGHTS

சோழவந்தான் வட்டாரப் பகுதிகளில்,  எம்.ஜி.ஆர். பிறந்த தினம்: அதிமுகவினர் கொண்டாட்டம்
X

சோழவந்தான் அருகே கருப்பட்டியில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினர்.

கருப்பட்டி எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்

சோழவந்தான், ஜன.18:

முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டுக சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு, அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை ஏற்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார் .

ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஒன்றிய அவைத் தலைவர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி வரவேற்றார். மருத்துவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் கருப்பையா லட்டு வழங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்புக்கு வழங்கினார் .

இதில், மகளிர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் லட்சுமி ,வக்கீல் விருகை தர்மர், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினார்கள் .கிளைச் செயலாளர் பழனியாண்டி நன்றி கூறினார். இதேபோல், மன்னாடி மங்கலம் கிராமத்தில் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி தலைமையில், எம் ஜி ஆர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .

வடக்கு பகுதியில் ,ராமு ஏற்பாட்டில் எம்ஜிஆர் பாடத்திற்கு மரியாதை செய்யப்பட்டது தேனூர் கிராமத்தில் கிளைச் செயலாளர் சோனைமுத்து ஏற்பாட்டில் நிர்வாகிகள் பாஸ்கரன் உள்ளிட்டோர் எம் ஜி ஆர் படத்திற்கு மரியாதை செய்தனர்

ஓபிஎஸ் அணியினர் ,சோழவந்தான் நகரச் செயலாளர் ராமசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் திரவியம் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார் .

செந்தில்குமார் இனிப்பு வழங்கினார் . அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் , வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் கருப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரிஷபம் ராமநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதுரை அருகே, சோழவந்தான் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தின விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சோழவந்தான் கடைவீதியில், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் தலைமையில், எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இளைஞர் அணி நகரச் செயலாளர் கேபிள் மணி இனிப்பு வழங்கினார். இதில், அதிமுக கவுன்சிலர் சண்முக பாண்டி ராஜா, மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், வார்டு செயலாளர் மணிகண்டன் ஊத்துக்குளி சையது கண்ணன், மன்னாடிமங்கலத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி மற்றும் ராமுகுருவி துறையில் கிளைச் செயலாளர் தண்டாயுதம் சி .புதூர் கிராமத்தில் ,ஊராட்சி மன்ற த் தலைவர் பாண்டுரங்கன், தேனூரில் சோனைமுத்து, பாலாஜி ஆகியோர் அந்தந்த கிராமத்தில் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

Updated On: 18 Jan 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...