/* */

சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்

மதுரை பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டு நாயக்கர் மன்னரால் குடமுழுக்கு நடத்தப்பட்ட கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
X

கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

2500 ஆண்டுகளுக்கு முன், மதுரை பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டு நாயக்கர் மன்னரால் குடமுழுக்கு நடத்தப்பட்ட கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கொடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதாய குமார சுப்ரமணியசாமி திருக்கோவில் பாலாலய விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று காலை 7 மணி முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது .

காலை 7 மணிக்கு மங்கள இசை குமர கடவுளிடம் அனுமதி பெறுதல் விநாயகர் வழிபாடு மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மூலமந்திரம் மற்றும் பூர்ணாஹுதியுடன் தீபாரதனை நடைபெற்றது.

கோவிலை சுற்றி கலசங்கள் வலம் வந்தது அதனைத் தொடர்ந்து காலை 10:20 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் மயூர விமான பாலாலயம் நடைபெற்றது. ஆலய அர்ச்சகர் மகேஷ் வாத்தியார் , பழனி பால தண்டாயுதபாணி குருக்கள் ராஜா சண்முகம், பழனி ஸ்தபதி விசுவமூர்த்தி ஆகியோர் யாகவேள்வி நடத்தினர். பாலாலய ஏற்பாடுகளை, கொடிமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 27 April 2024 7:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...