/* */

மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!

மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
X

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில் தெருவில் சாலையில் மோசமாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை:

மதுரை:

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.

அதை போக்கும் வகையில், கடந்த இரு தினங்களாக மதுரை மாவட்டத்தில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை திருப்பரங்குன்றம், திருநகர், விளாச்சேரி, அவனியாபுரம், புதூர் ,அண்ணா நகர், கருப்பாயூரணி, செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, சமயநல்லூர், பரவை, அழகர் கோவில், மேலூர் உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. இதனால், மாலை நேரங்களில் பல இடங்களில் குளிர்ந்த காற்று வீசியது . கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெப்பநிலை தணிக்கும் வகையில், இந்த மழையானது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.

மேலும், மதுரை நகரில் பலத்த மடையால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றன. மதுரை அண்ணா நகர் மருதுபாண்டியர் தெரு, ஜூப்பிலி டவுன், கோமதிபுரம் உள்ளிட்ட பல தெருக்களில் மழைநீர்கள் குளம் போல தேங்கின. இதனால், இரண்டு சக்கர வாகன செல்வோர் மிகவும் அவதி அடைந்தனர்.

இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கும் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 10 May 2024 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு