/* */

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்   தேர்வு துவக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை, மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, இம்மாதம் 26ம் தேதி முதல் ஏப். 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 92 தேர்வுமையங்களில் 10,335 மாணவர்களும் 9,697 மாணவிகளும் ஆக மொத்தம் 20,032 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 8 மையங்களில் தனித்தேர்வர்களாக 417 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களில், 334 மாணவர்களுக்கு சொல்வதை எழுதும் உதவியாளர் நியமனம்செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 92 முதன்மைக்கண்காணிப்பாளர்கள், 92 துறைஅலுவலர்கள், 4 கூடுதல்துறைஅலுவலர்கள், 140 பறக்கும் படை உறுப்பினர்கள், 24 வழித்தடஅலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 1,295 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களை பார்வையிட மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில்குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணைஇயக்குநர், மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலகள் மற்றும் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர்களைக் கொண்ட குழுவினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாவட்ட ஆட்சியர் உமா புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 26 March 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  2. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  3. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  5. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  6. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  7. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  10. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...