நாமக்கல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு
HIGHLIGHTS
நாமக்கல், ஜன. 18-
நாமக்கல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கம் அருகே உள்ள பச்சுடையான்பட்டி புதூரை சேர்ந்தவர்கள் டேவிட் (25), மோகன்குமார் (25), பூவரசன் (25) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில், நேற்று இரவு 10.30 மணிக்கு சேந்தமங்கலத்தில் இருந்து சாலையூர் நோக்கி புதன்சந்தை ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர்.
அதே பச்சுடையான்பட்டி புதூரை சேர்ந்தவர்கள் சரவணன் (17), கௌதம் (17), இருவரும், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில், புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
சாலையூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களில், டேவிட் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கெளதம் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பூவராகவன், மோகன்குமார் ஆகிய இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற்றனர்.