/* */

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் நகை, பணம் கொள்ளை

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் நகை, பணம்  கொள்ளை
X

கொள்ளை நடந்த வீட்டில் பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

தள்ளுவண்டி டிபன் கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து, 21.50 பவுன் நகை, 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், மோகனூர் ரோடு, கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் செந்தில் (வயது48). அவரது மனைவி நிர்மலா. இந்த தம்பதியருக்கு, பிரகதீஷ் என்ற மகன் உள்ளார். செந்தில், தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த, 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி, மகனுடன் செந்தில் மகாதேவி கிராமத்தில் உள்ள மருமகன் வீட்டுக்கு, திருவிழாவிற்கு சென்று விட்டனர்.

அடுத்த நாள் இரவு, 10.45 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 21.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 7 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, செந்தில், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த, 30ம் தேதி, நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கன்டக்டர் பத்மநாபன் (62) என்பவரது வீட்டில், பகல் நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதில் இருந்த, 34.50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இந்த குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. கொள்ளையடித்தவர்கள் யார் என்ற துப்பும் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிபன் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் மாவட்ட மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 7 May 2024 2:35 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...