/* */

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

ஆந்திர மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
X

நாமக்கல் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில், நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி ஒரு கோழிப்பண்ணையில் இருந்த, சுமார் 10 ஆயிரம் கோழிகள் திடீரென இறந்தன. இதையொட்டி இறந்த கோழிகளில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு தேசிய விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் இறந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எச்5என்1 உருமாறிய வைரஸால், இந்த பறவைக்காய்ச்சல் நோய் பண்ணையில் இருந்த கோழிகளை தாக்கி கோழிகள் இறந்தது தெரியவந்துள்ளது. இதையொட்டி ஆந்திரா முழுவதும் பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்ட ஆட்சியர் :

இது குறித்து ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் கூறியதாவது:

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள, சட்டகுட்ல, குமாளடிப்பா ஆகிய இரண்டு கிராமங்களில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதைச் சுற்றிலும் சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோழி, கோழிக்கறி மற்றும் முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

நாமக்கல் மண்டலம்:

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில், ஆந்திர எல்லையில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறையும், கோழிப்பண்ணையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளனர். இங்கு சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.

நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 19 Feb 2024 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  4. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  5. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  6. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  7. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  8. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  9. ஈரோடு
    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!