திருச்செங்கோடு பகுதியில் மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி
Central Govt Awareness Programme திருச்செங்கோடுபகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசின், நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குஜராத் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
Central Govt Awareness Programme
திருச்செங்கோடுபகுதியில் நடைபெற்று வரும் மத்திய அரசின், நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குஜராத் எம்.பி. கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில், நடைபெற்று வரும், மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம், விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் குழு உறுப்பினரும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த லோக்சபா எம்.பியுமான ரமீலாபென் பாரா நேரில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட சின்ன மணலி, பெரிய மணலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, ரமீலாபென் பாரா எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். மேலும் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மாவுரெட்டிப்பட்டி, கோக்கலை, இலுப்பிலி, அகரம் ஆகிய கிராம் பகுதிகளிலும், வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜ பொருளாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட திரளான பாஜ பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.