எருமப்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Namakkal news-எருமப்பட்டி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திப்ரமாதேவி பகுதியில் உள்ள ஏரியில், நவீன இயந்திரங்களைக் கொண்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சியை பார்வையிட்டார். அப்போது, பயிற்சி மேற்கொள்ளும் மாணவிளின் எண்ணிக்கை, அளிக்கப்டும் பயிற்சிகள் உள்ளிட்ட விபரங்களை அலுவலர்களிடம் ஆட்சியர் உமா விரிவாக கேட்டறிந்தார். பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.