/* */

நாமகிரிபேட்டை பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமகிரிபேட்டை பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமகிரிபேட்டை பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கார்கூடல்பட்டியில், பழங்குடியின இருளர் மக்களுக்கு கட்டப்படும் வீடுகளை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, கார்கூடல்பட்டி மற்றும் ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 40.81 லட்சம் மதிப்பீட்டில் சிவா நகர் பஸ் ஸ்டாப் முதல் பெருமாள் மலை அடிவாரம் வரை 0.775 கி.மீ தொலைவிற்கு தார்சாலை மேம்படுத்தப்பட்டுள்ளதையும், 2 சிறுபாலங்கள் மற்றும் 86 மீட்டர் தொலைவிற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கார்கூடல்பட்டி கிராமத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பழங்குடியினர் இன1 இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பயனாளிகளின் வீட்டை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஒடுவன்குறிச்சி பஞ்சாயத்தில் ரூ. 97.66 லட்சம் மதிப்பீட்டில் ஒடுவன்குறிச்சி முதல் ஜேடர்பாளையம் சாலை வழியாக பெருமாள் கவுண்டம்பாளையம் வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும் ஆட்சியர் உமா பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 10 May 2024 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு