நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழு கூட்டம்
DMK special working committee meeting நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சிறப்பு செயற்குழுக் கூட்டம் நாளை நாளை நடைபெறுகிறது.
HIGHLIGHTS
DMK special working committee meeting
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலார் ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை 11ம் தேதி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்திலங் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவ வங்கியை தொடங்குவதற்கு அனுமதி அளித்து, அதற்கான உத்தரவு பிறப்பித்த, தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் லோக்சபா தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.