Domestic Gas Customers Grievance Meet நாமக்கல்லில் 29 ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
Domestic Gas Customers Grievance Meet நாமக்கல்லில் வருகிற 29ம் தேதி புதன்கிழமை சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
Domestic Gas Customers Grievance Meet
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் சமையல் கேஸ் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நுகர்வோர்கள் நலன் கருதி கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவன மேலாளர்கள், கேஸ் முகவர்கள், விநியோகஸ்தர்கள், கேஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருகிற 29ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டத்திற்கு தலைமை வகித்து கேஸ் நுகர்வோர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.
எனவே, சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும், பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சமையல் கேஸ் விநியோகம் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தேர்வு பெறலாம் என் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.