/* */

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு வார விழா

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் நடைபெற்ற  சமரச விழிப்புணர்வு வார விழா
X

நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் (கோப்பு படம்)

நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

தமிழக சமரச மைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் வழிகாட்டுதலின்படி, கடந்த, 8 முதல், 11ம் தேதி வரை, சமரச விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள கோர்ட்டுகளில், நீதிபதிகள் சமரச விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நாமக்கல்லில் மக்கள் அதிகம் கூடும் கோர்ட்டுகள், பஸ் ஸ்டாண்ட், பூங்கா ஆகிய இடங்களில், சமரச மைய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடியோ வேன் மூலம், சமரசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மொபைல் வேன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு, சமரச தீர்வாளர்கள் மூலம், சமரச விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், நாமக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, சம்மந்தப்பட்டவர்கள் சமரச தீர்வு மையத்தில் சமரச முறையில் தீர்வு கண்டு, இரண்டு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடித்து பயன்பெற அறிவுறுத்தினார்.

Updated On: 12 April 2024 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு