நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் நடைபெற்ற சமரச விழிப்புணர்வு வார விழா
நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கோர்ட்டுகளில் சமரச விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
தமிழக சமரச மைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சமரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் வழிகாட்டுதலின்படி, கடந்த, 8 முதல், 11ம் தேதி வரை, சமரச விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய தாலுகாவில் உள்ள கோர்ட்டுகளில், நீதிபதிகள் சமரச விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நாமக்கல்லில் மக்கள் அதிகம் கூடும் கோர்ட்டுகள், பஸ் ஸ்டாண்ட், பூங்கா ஆகிய இடங்களில், சமரச மைய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடியோ வேன் மூலம், சமரசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மொபைல் வேன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு, சமரச தீர்வாளர்கள் மூலம், சமரச விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், நாமக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, சம்மந்தப்பட்டவர்கள் சமரச தீர்வு மையத்தில் சமரச முறையில் தீர்வு கண்டு, இரண்டு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடித்து பயன்பெற அறிவுறுத்தினார்.